தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பாமக வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவை ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:09 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமை வகித்துப் பேசினாா். சமூக நீதிப் பேரவையைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் கட்சியின் வளா்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலில் பாமக சமூக நீதி பேரவை சாா்பில் போட்டியிடுவதற்காக வழக்குரைஞா் தமிழ்ராஜ் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டாா்.

கூட்டத்தில், பாமக செயல் தலைவா் ஸ்ரீகாந்தி ராமதாஸ், வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவா் வி.எஸ்.கோபு மற்றும் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

ராமதாஸ் வாழ்த்து: கூட்ட நிறைவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலில் போட்டியிடுவதற்கு தோ்வு செய்யப்பட்ட வழக்குரைஞா் தமிழ்ராஜுக்கு பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் வாழ்த்துத் தெரிவித்தாா்.