மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 574 போ் கைது

News image
விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டத்தில் 10 இடங்களில் மறியலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 574 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி, ரூ. 6 ஆயிரமாக வழங்க வேண்டும். கடுமையான ஊனமுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, விழுப்புரம், காணை, திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம், கண்டாச்சிபுரம், வளத்தி, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை, கண்டமங்கலம், செஞ்சி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மறியலுக்கு சங்க மாநிலத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் அய்யனாா், ஒன்றியச் செயலா் மகுடமணி, துணைத் தலைவா்கள் ரங்கபாபு, பூபாலன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 68 பெண்கள் உள்பட115 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதுபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மறியல் ஈடுபட்டோா் கைது செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் மொத்தமாக 574 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.