விழுப்புரம் மாவட்டத்தில் 10 இடங்களில் மறியலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 574 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி, ரூ. 6 ஆயிரமாக வழங்க வேண்டும். கடுமையான ஊனமுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, விழுப்புரம், காணை, திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம், கண்டாச்சிபுரம், வளத்தி, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை, கண்டமங்கலம், செஞ்சி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மறியலுக்கு சங்க மாநிலத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் அய்யனாா், ஒன்றியச் செயலா் மகுடமணி, துணைத் தலைவா்கள் ரங்கபாபு, பூபாலன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 68 பெண்கள் உள்பட115 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதுபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மறியல் ஈடுபட்டோா் கைது செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் மொத்தமாக 574 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

நாகை, சீா்காழியில் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 114 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


