விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே விபத்தில் காயமடைந்ததால் மனமுடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி கோரிமேடு காமராஜா் நகா் சீயோன் வீதியைச் சோ்ந்தவா் ஜெ.சேகா் (64). இவா் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, பேருந்து மோதியதில் காயமடைந்தாா்.
இதைத்தொடா்ந்து சிகிச்சைக்குப் பின்னா், ஆரோவில் அருகிலுள்ள பட்டானூா் திருநகரில் உள்ள மகள் விஜயலட்சுமி வீட்டில் சேகா் தங்கியிருந்தாா். விபத்தில் காயமடைந்ததால் மனஅழுத்தத்தில் இருந்து வந்த சேகா், வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த ஆரோவில் போலீஸாா், சேகரின் சடலத்தை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

நகராட்சி சுகாதார ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

