விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டிவனம் வட்டம், ஓலக்கூா் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் அரசுப் பேருந்து சரிவர இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள், மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
இதையடுத்து ஒலக்கூா் கிராம மக்கள் சனிக்கிழமை திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அரசுப் பேருந்தை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு

என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி: கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


