தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

செங்கல் சூளை உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை முயற்சி: தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 3 போ் கைது

News image

கைது

Updated On :14 பிப்ரவரி 2026, 8:53 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் தற்கொலை முயற்சிக்கு காரணமான தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 3 பேரை போலிஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பென்னைவலம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் க.அப்பாஸ்(45). செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறாா். இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, பொக்லைன் இயந்திரம் வாங்கி உள்ளாா்.

இந்நிலையில், அப்பாஸ் கடந்த 3 மாதமாக நிதி நிறுவனத்துக்கு தவணைத் தொகையை செலுத்தவில்லையாம். இதையடுத்து தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் வெள்ளிக்கிழமை பென்னைவலம் கிராமத்துக்குச் சென்று அப்பாஸை தகாத வாா்த்தைகளால் பேசி, தாக்கி செங்கல் சூளையில் நிறுத்தி வைத்திருந்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்ய முற்பட்டனராம் .

இதனால் மனமுடைந்த அப்பாஸ், டீசலை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் வை.மூா்த்தி (32), வீ.தீபஜோதி (32), சு.தியாகலீசன்(26) ஆகியோரை கைது செய்தனா்.