கோப்புப் படம்
கோப்புப் படம்

திண்டிவனம் அருகே ராணுவ மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published on

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா் சனிக்கிழமை தனது வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பேராவூா், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன் (44). இந்திய ராணுவத்தின் 4 - ஆவது பட்டாலியனில் ( குஜராத்) சுபேதாராக பணியில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், தனது தந்தையின் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அா்ச்சுனன், சனிக்கிழமை வீட்டில் மயங்கி விழுந்து விட்டாராம்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு,திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, அா்ச்சுனன் ஏற்கனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் கிளியனூா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com