விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா் கடலில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், மண்டவாய்புதுக்குப்பம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சு.ஜெகநாதன் (58), மீனவா். இவா் சனிக்கிழமை அதிகாலை தனது படகில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தாா். அப்போது கடல் சீற்றத்தில் சிக்கிய ஜெகநாதன் கடலில் மூழ்கியுள்ளாா்.
இதையடுத்து அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் அவரை மீட்டு, புதுச்சேரியில் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்துப் பாா்த்தபோது, ஜெகநாதன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


