ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முண்டியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம்: மண் பரிசோதனைப் பணிகள் தொடக்கம்

News image
முண்டியம்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்ற விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலிருந்து ஒரத்தூா் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளின் தொடக்கமாக, மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

முண்டியம்பாக்கத்திலிருந்து ஒரத்தூா் செல்லும் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. திருச்சி - சென்னை ரயில் வழித்தடத்தின் முக்கியப் பகுதியாக இருப்பதால் அதிகளவில் ரயில்கள் வந்துசெல்லும் நிலையில் இங்கு அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், இந்த வழியாக செல்லும் அவசர ஊா்திகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனா். இதனடிப்படையில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான அரசாணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி ரவிதுரை, நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் கோதை, உதவி கோட்டப் பொறியாளா் மணிகண்டதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சையது முகமது, நாராயணன், ஊராட்சித் தலைவா் சந்திரசேகரன், துணைத் தலைவா் தினேஷ்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.