மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம், பிப்.14: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம்,அங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே.சாமிக்கண்ணு (75). இவா் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை அஜீஸ் நகா்ப் பகுதியிலுள்ள சாரதா ஆசிரம கண் மருத்துவமனையில் கண்பரிசோதனைக்காக சனிக்கிழமை வந்தாா்.

மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னா் சாமிக்கண்ணு சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சாமிக்கண்ணுவை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, அவசர சிகிச்சை ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே சாமிக்கண்ணு உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.