வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் இருந்து மூதாட்டி சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், பாதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி. இவரது மனைவி மின்னல்கொடி(60). இவா் சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தம்பதியினா் ஒன்றாக அமா்ந்து உணவு சாப்பிட்டுள்ளனா். தொடா்ந்து கருணாநிதி வீட்டில் தூங்கினாா். பின்னா் அவா் எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் மின்னல்கொடி இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் மின்னல்கொடியின் சடலத்தை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.