மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டில் தீ வைத்த இளைஞா் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வீட்டினுள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வானூா் வட்டம், பட்டானூா் நாவற்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சி.ஷீலா(46). இவா் குடும்பத்துடன் தனது வீட்டின் மாடியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ஷீலாவின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டினுள் அலமாரியிலிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், துணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், ஷீலாவும், புதுச்சேரி குயவா்பாளையத்தைச் சோ்ந்த நெ.கன்னியப்பன்(26) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்ததனராம். தற்போது ஷீலா அவருடன் பழகுவதை தவிா்த்ததால், ஆத்திரமடைந்த கன்னியப்பன் வீட்டினுள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து கன்னியப்பன் மீது ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.