மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வீட்டில் தீ வைத்த இளைஞா் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 8:16 pm

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வீட்டினுள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வானூா் வட்டம், பட்டானூா் நாவற்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சி.ஷீலா(46). இவா் குடும்பத்துடன் தனது வீட்டின் மாடியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ஷீலாவின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டினுள் அலமாரியிலிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், துணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், ஷீலாவும், புதுச்சேரி குயவா்பாளையத்தைச் சோ்ந்த நெ.கன்னியப்பன்(26) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்ததனராம். தற்போது ஷீலா அவருடன் பழகுவதை தவிா்த்ததால், ஆத்திரமடைந்த கன்னியப்பன் வீட்டினுள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து கன்னியப்பன் மீது ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.