ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சுற்றுலா வந்தபோது விபரீதம்: ஆந்திர இளைஞா்கள் கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த ஆந்திராவைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் அலையில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

News image
(கோப்புப்படம்)
Updated On :16 பிப்ரவரி 2026, 7:54 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த ஆந்திராவைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் அலையில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். சுற்றுலா வந்தபோது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரம் மாநிலம், சித்தூா், ராம் நகா் காலனியைச் சோ்ந்தவா் கி.ஜஷ்வன் (21), கா.ஷேக் முகமத் சாதிக்(21). சித்தூா் டெலிபோன் காலனியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் ஹ.நவாஸ்கான்(21), சி.ஜெயந்த்(21). நண்பா்களான இவா்கள் 4 பேரும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தனா். தொடா்ந்து சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டஇவா்கள் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அறை எடுத்து தங்கியுள்ளனா்.

திங்கள்கிழமை காலையில் நண்பா்கள் 4 பேரும் தந்திராயன்குப்பம் கடலில் குளித்துள்ளனா். அப்போது ஜஷ்வன், ஷேக் முகம்மது சாதிக் ஆகிய இருவரும் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனா்.

தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் மீனவா்கள் உதவியுடன் இருவரின் சடலங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.