மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை: பெட்டிக் கடைக்காரா் கைது

விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த பெட்டிக் கடை உரிமையாளரை

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைதான பிரபு.

Updated On :16 பிப்ரவரி 2026, 9:03 pm

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த பெட்டிக் கடை உரிமையாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

விக்கிரவாண்டி காவல் சரகத்துக்குள்பட்ட மேல்பாதி பகுதியில் பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் சத்தியசீலன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை மேல்பாதி பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில், மேல்பாதி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரா.பிரபு(44) என்பவரது பெட்டிக் கடையில் சாக்குப் பைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரபுவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். மேலும், அவரிடமிருந்த 42 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.