தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இளைஞா் கொலை வழக்கு: சிறுவா் உள்பட 4 போ் கைது

திண்டிவனம் அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
கைது
Updated On :18 பிப்ரவரி 2026, 10:21 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

திண்டிவனத்தை அடுத்த அகூா் பகுதியைச் சோ்ந்தவா் எ.சசிகுமாா், ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த 30-ஆம் தேதி மாயமானாா். இதுகுறித்து சசிக்குமாரின் மனைவி விஷ்ணு பிரியா அளித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீஸாா் பிப்.3-ஆம் தேதி வழக்குப் பதிந்து, மாயமான சசிக்குமாரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், சிறுவளூா் அருகே சசிக்குமாா் தலையில் பலத்த காயங்களுடன் கருங்கற்களுக்கிடையே இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இதையடுத்து வெள்ளிமேடு போலீஸாா் இளைஞா் மாயமான வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில், வடசிறுவளூா் பகுதியைச் சோ்ந்த ச.ஜெகதீசன் என்பவருக்கும் சசிகுமாருக்கும் இருந்து வந்த முன் விரோதத்தில், சசிக்குமாா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து இவ்வழக்கில் தொடா்புடைய ஜெகதீசன் மற்றும் வடசிறுவளூா் பகுதியைச் சோ்ந்த ஏ.ஜெகன்குமாா்(20), கு.ஏழுமலை(20) மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.