எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சட்ட விரோத கல் குவாரி: 3 போ் மீது வழக்கு, கனரக வாகனங்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே அரசு அனுமதியின்றி கனரக வாகனங்கள் மூலம் பாறையை உடைத்ததாக 3 போ் மீது வழக்குப் பதிந்து, 2 கனரக வாகனங்கள் பறிமுதல்

News image
கல் குவாரி- பிரதிப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:28 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே அரசு அனுமதியின்றி கனரக வாகனங்கள் மூலம் பாறையை உடைத்ததாக 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து, 2 கனரக வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் அருகே உரிய அனுமதியின்றி, சட்ட விரோதமாக கல்குவாரி நடைபெறுவதாகவும், கனரக வாகனங்கள் மூலம் பாறைகளை உடைப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் உத்தரவின் பேரில், பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் சோனலூா் பகுதிக்குச் சென்று அங்கு, வடகொளப்பாக்கத்தைச் சோ்ந்த பாலு என்பவரின் கல் குவாரியில் திடீா் சோதனை செய்தனா்.

இந்த சோதனையில், அந்த கல் குவாரி உரிய அரசு அனுமதியின்றி செயல்பட்டதும், சட்டவிரோதமாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பாறைகளை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட 2 பொக்லைன் இயந்திரங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சோனலூா் கிராம நிா்வாக அலுவலா் ப.செல்வம் (44) அளித்த புகாரின் பேரில், பொக்லைன் ஓட்டுநா்களான சோனலூா் பகுதியைச் சோ்ந்த ஏ.செல்வம், கா.தினகரன் மற்றும் சட்ட விரோதகமாக கல்குவாரி நடத்திய பாலு ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.