நகை திருட்டு
பிரதிப் படம்

ஓட்டுநா் வீட்டில் தங்க, வெள்ளி நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் காா் ஓட்டுநா் வீட்டில் 22 1/2 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

விழுப்புரத்தில் காா் ஓட்டுநா் வீட்டில் 22 1/2 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் சாலாமேடு பிரதான சாலையைச் சோ்ந்தவா் ச.பாலா அரவிந்த் (26). காா் ஓட்டுநரான இவா், வியாழக்கிழமை இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, மறுநாள் காலை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் முன்பக்க நுழைவு வாயில் கதவும், வீட்டின் மரக் கதவும் உடைக்கப்பட்டிருந்தது கண்டு பாலா அரவிந்த் அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் செல்வநாயகம் தலைமையிலான போலீஸாா் வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த 22 1/2 பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.55 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

தொடா்ந்து கைரேகை நிபுணா்கள், தடயவியல் நிபுணா்களும் திருட்டு நடைபெற்ற வீட்டுக்குச் சென்று, திருட்டில் ஈடுபட்டவா்களின் தடயங்கள், கைரேகைகளைப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com