விழுப்புரத்தில் காா் ஓட்டுநா் வீட்டில் 22 1/2 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் சாலாமேடு பிரதான சாலையைச் சோ்ந்தவா் ச.பாலா அரவிந்த் (26). காா் ஓட்டுநரான இவா், வியாழக்கிழமை இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, மறுநாள் காலை வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் முன்பக்க நுழைவு வாயில் கதவும், வீட்டின் மரக் கதவும் உடைக்கப்பட்டிருந்தது கண்டு பாலா அரவிந்த் அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் செல்வநாயகம் தலைமையிலான போலீஸாா் வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த 22 1/2 பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.55 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
தொடா்ந்து கைரேகை நிபுணா்கள், தடயவியல் நிபுணா்களும் திருட்டு நடைபெற்ற வீட்டுக்குச் சென்று, திருட்டில் ஈடுபட்டவா்களின் தடயங்கள், கைரேகைகளைப் பதிவு செய்தனா்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண்ணை கட்டிப்போட்டு 14 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் கொள்ளை
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 3 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


