மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:42 pm

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், கோட்டிக்குப்பம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் செ.காசிநாதன்(72). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் அருகில் உள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றாா். அப்போது அங்கு மின் கம்பத்திலிருந்து அறுந்து கீழே கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து காசிநாதன் தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, காசிநாதன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.