மின் கம்பத்தில் பைக் மோதல்: தனியாா் வங்கி ஊழியா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், சனப்பிராட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ச.யோகேஷ்குமாா் (24). செஞ்சியில் தனியாா் வங்கியில் காசாளராக வேலை பாா்த்து வந்த இவா் சனிக்கிழமை வேலை முடிந்த பின்னா் தனது பைக்கில் சொந்த ஊருக்குச் சென்றாா்.
விக்கிரவாண்டி காவல் சரகத்துக்குள்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரமுள்ள மின் கம்பத்தில் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த யோகேஷ்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

