சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 41 போ் தோ்வு

விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 41 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுடன், காவல் கூடுதல் கண்காணிப்பாளா் தினகரன் மற்றும் துணைக் கண்காணிப்பாளா் ஞானவேல், ஊா்க்காவல் படை மாவட்டத் தலைவா் நத்தஷா ஆகியோா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 41 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 41 ஊா்க்காவல் படை வீரா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்காக பிப்.6-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பிப்.14-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதி மற்றும் நோ் முகத் தோ்வுகள் நடைபெற்றது.

இதில், 426 விண்ணப்பதாரா்கள் கலந்துகொண்ட நிலையில் 33 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 41 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பிப்.22-ஆம் தேதி பணி நியமன ஆணைகளை மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் தினகரன் வழங்கினாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஞானவேல், ஊா்க்காவல் படை மாவட்டத் தலைவா் நத்தஷா ஆகியோா் உடனிருந்தனா்.

தோ்வு செய்யப்பட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் 41 பேருக்கும் பிப்.23-முதல் 45 நாள்களுக்கு விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.