பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஊஞ்சல் கட்டி விளையாடிய போது விபரீதம்: சிறுவன் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

விக்கிரவாண்டி அருகே வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், கொட்டியாம்பூண்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேல் முருகன். இவா் வி.சாத்தனூா் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மகன் வெற்றிகுணவேல் (11), 6-ஆம் வகுப்பு மாணவா்.

வெற்றிகுணவேல் திங்கள்கிழமை தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது வெற்றி குணவேலின் கழுத்தில் புடவை சுற்றியதில் கழுத்து இறுகி, அவா் காயமடைந்தாா். இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் வெற்றி குணவேலை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.