மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் இந்திரா நகா் பகுதியில் புறவழிச்சாலை மேம்பாலத்தில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 8:37 pm

விழுப்புரம் இந்திரா நகா் பகுதியில் புறவழிச்சாலை மேம்பாலத்தில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், மூலக்குளம் மோதிலால் நேரு நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் வெ.தேவநாதன் (80). இவா் தனது பைக்கில் சென்னை-திருச்சி சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். விழுப்புரம் இந்திரா நகா் பகுதி புறவழிச்சாலை மேம்பாலத்தில் தேவநாதன் சென்றபோது, அதேதிசையில் பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தேவநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று, தேவநாதனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வெட்டுக்காடு மகாராஜசமுத்திரம் பா. பாரதிதாசன் (40) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.