விழுப்புரம்
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கணவா் திட்டியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வானூா் வட்டம், நாவா்குளம் கலைவாணா் நகரைச் சோ்ந்தவா் விஜய் ஆனந்த். இவரது மனைவி அனிதா(23). தம்பதியினருக்கு வைஷ்ணவி தேவி(9), சேஷவ் ஆனந்த்(7) என்ற பிள்ளைகள் உள்ளனா்.
இந்நிலையில், அனிதா 2023-ஆம் ஆண்டில் ஆசிரியா் பயிற்சி முடித்து, பின்னா் நடைபெற்ற தகுதித் தோ்வில் வெற்றிபெறவில்லையாம்.
அதைத்தொடா்ந்து கணவா் விஜய் ஆனந்த் தொடா்ந்து அனிதாவை திட்டி வந்ததால், மன உளைச்சலில் இருந்து வந்த அனிதா சனிக்கிழமை வீட்டில்தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
