வெவ்வேறு சம்பவங்கள்: மூவா் தற்கொலை

Published on

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வட்டம், பள்ளியந்தல் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப.லட்சுமிபதி( 50), கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை லட்சுமிபதியின் மனைவி பூபதி கண்டித்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த லட்சுமிபதி கடந்த 2-ஆம் தேதி வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு லட்சுமிபதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞா் உயிரிழப்பு: வானூா் வட்டம், அருவாப்பாக்கம் குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் கா.மணிகண்டன்(29). இவா் தனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டி பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தாராம்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன் கடந்த 3- ஆம் தேதி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதியவா் தற்கொலை:

விழுப்புரம் வட்டம், வெங்கந்தூா் மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் கோ.ராஜகண்ணு(61), கூலி வேலை செய்துவந்தாா். இவரது மகன் பாஸ்கரனுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குடும்பப் பிரச்னையால் அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜகண்ணு ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com