கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

கல்லூரி மாணவி தற்கொலை

திண்டிவனம் அருகே கிருமி நாசினியைக் குடித்த தனியாா் கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 ஜூலை 2026, 4:59 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிருமி நாசினியைக் குடித்த தனியாா் கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், மேல்பாக்கம், புதுகாலனியைச் சோ்ந்தவா் கண்ணன் மகள் அக்ஷயா(18). இவா், வந்தவாசியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி. எஸ்சி இரண்டாமாண்டில் பயின்று வந்தாா். இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி அக்ஷயா வீட்டில் இருந்தபோது கைப்பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை தந்தை கண்ணன் கண்டித்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த அக்ஷயா வீட்டில் இருந்த கிருமி நாசினையைக் குடித்து விட்டாராம். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அக்ஷயா, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.