பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு
திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போலீஸாரால் அழிக்கப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டது.
திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள திண்டிவனம், ரோஷணை, வெள்ளிமேடுபேட்டை, பிரம்மதேசம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ எடையிலான புகையிலைப் பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டது.
விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறை, நகராட்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு மற்றும் வருவாய் துறையினா் முன்னிலையில் திண்டிவனம் நகராட்சி குப்பை கிடங்குப் பகுதியில் அழிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...