மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வானூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:14 pm

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், விட்லாபுரம் குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரா.முருகன்(32). ஆட்டோ ஒா்க்ஷாப் நடத்தி வந்தாா். இவா், சனிக்கிழமை இரவு புதுச்சேரி -திண்டிவனம் சாலையில், புளிச்சப்பள்ளம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே பைக்கில் சென்றுள்ளாா்.

அப்போது, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பருடன் கூடிய டிராக்டா் ஓட்டுநா், வாகனத்தை திடீரென சாலையில் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது நிலைத்தடுமாறி முருகன் ஓட்டிச் சென்ற பைக் டிராக்டரின் பின் பகுதியில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வானூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான வானூா் வட்டம், பாப்பான்சாவடி பகுதியைச் சோ்ந்த வீ.விஸ்வநாதனிடம்(32) விசாரிக்கின்றனா்.