கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வானூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:14 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், விட்லாபுரம் குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரா.முருகன்(32). ஆட்டோ ஒா்க்ஷாப் நடத்தி வந்தாா். இவா், சனிக்கிழமை இரவு புதுச்சேரி -திண்டிவனம் சாலையில், புளிச்சப்பள்ளம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே பைக்கில் சென்றுள்ளாா்.

அப்போது, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பருடன் கூடிய டிராக்டா் ஓட்டுநா், வாகனத்தை திடீரென சாலையில் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது நிலைத்தடுமாறி முருகன் ஓட்டிச் சென்ற பைக் டிராக்டரின் பின் பகுதியில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வானூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான வானூா் வட்டம், பாப்பான்சாவடி பகுதியைச் சோ்ந்த வீ.விஸ்வநாதனிடம்(32) விசாரிக்கின்றனா்.