92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், அனுமந்தை, ஆவிகுளம் வடக்குத் தோப்பைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மனைவி கஸ்தூரி(52). இவா் ஞாயிற்றுக்கிழமை அனுமந்தை கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் நடந்து சென்றாா்.

அப்போது அங்கு வெங்கட் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கஸ்தூரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் கஸ்தூரியின் சடலத்தை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.