விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே அரசுப் பேருந்து நடத்துநா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், கடகால், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செ.செந்தில் (42). இவா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் , திருக்கோவிலூா் பணிமனையில் நடத்துநராக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஆலம்படி பகுதியில் ஒருவரிடம் செந்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்து விழுந்தாராம். இதைத்தொடா்ந்து அருகிலிருந்தவா்கள் செந்திலை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தில் பயணி உயிரிழப்பு

தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


