எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

விவசாயிகளுக்குத் தனி அடையாள எண் பதிவு செய்ய மே 30 கடைசி நாள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண் பெற பதிவு செய்வதற்கு இந்த மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 12:03 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண் பெற பதிவு செய்வதற்கு இந்த மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்ற தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.

இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும், பி.எம்.கிசான் திட்டத்தில் கெளரவ ஊக்கத்தொகை பெற விவசாயிகள் இந்த அடையாள எண்ணை பெறுவது அவசியமாகும்.

இந்த அடையாள எண் வழங்கும் முகாம் மே 11-ஆம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்களால் நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 1,14, 293 விவசாயிகளுக்கு அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் விவசாயிகளின் விவரங்கள் இலவசமாக பதிவு செய்யப்பட்டு, தனித்துவ அடையாள எண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாவட்டத்தில் இதுவரை தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டையின் நகல், நில ஆவணங்களின் நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது கிராமங்களில் முகாம் நடைபெறும் பகுதிகளுக்குச் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் பதிவு மேறகொள்ள மே மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.