ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேல் ஓர் எம்பாவாய்
பொன். முத்துக்குமரன் குரலில்...
</p><p align="JUSTIFY"><strong>சற்குருநாதன் குரலில் கேட்க...</strong></p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/237669341&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><strong> </strong></p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">நித்திலம் = முத்து. ஒண்ணித்தில = ஒள்+நித்திலம். ஒள் = ஒளி பொருந்திய. அவம் = வீணான செயல். மருந்து = அமுதம். விழுப்பொருள் = மேன்மையான பொருள்.</p><p align="JUSTIFY"><strong>பொருள்</strong></p><p align="JUSTIFY">முத்து போன்று ஒளி வீசும் பற்களை உடையவளே, இன்னும் உனக்கு பொழுது புலரவில்லை போலும். வீட்டினில் உள்ளே இருந்த பெண் அங்கே இருந்தவாறே, வரவேண்டிய பெண்கள், கிளியின் நிறத்தையும் மென்மையான மொழியையும் கொண்ட பெண்கள், அனைவரும், வந்துவிட்டார்களா என்று கேட்கின்றாள். அவளது கேள்விக்கு விடை அளிக்கும் முகமாக, சற்றுப் பொறுத்துக்கொள்வாய், நாங்கள் எண்ணிச் சொல்கின்றோம் என்று பதில் அளிக்கின்றார்கள். சென்ற மூன்று பாடல்களில் தாங்கள் எழுப்பித் தங்களுடன் சேர்த்துக்கொண்ட பெண்கள் எவரும், அனைவரும் வந்தனரா என்ற கேள்வியைக் கேட்கவில்லை. எனவே இந்த பெண்ணின் கேள்விக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற சந்தேகம், வெளியே உள்ள தோழிகளுக்கு எழுகின்றது. ஒருக்கால், வெளியில் இருப்பவர்கள் எண்ணி முடிக்கும் வரையில், தான் மறுபடியும் சிறிய தூக்கம் போடுவதற்காக இந்த கேள்வி எழுப்பட்டதோ என்ற ஐயம் எழவே, தாங்கள் எண்ணுவதை நிறுத்திவிட்டு பின்வருமாறு கூறுகின்றார்கள். தோழியே, மறுபடியும் தூங்க ஆரம்பித்து உனது காலத்தை நீ வீணாக கழிக்காதே: தேவர்கள் அமுதம் அருந்துவதற்காக தான் நஞ்சை உண்டதால் அவர்களுக்கு அமுதம் போன்றவனும், வேதங்களில் குறிப்பிடப்படும் மேம்பட்ட பொருளாகவும், எங்களது கண்ணுக்கு இனியவனாகவும் உள்ள சிவபெருமானின் புகழினைப் பாடி, உள்ளம் கசிந்து உருகும் நிலையில் உள்ள நாங்கள், எங்களுடன் இருப்பவர்களை எண்ணுவதில் நேரத்தை வீணாக்கமாட்டோம். நீயே வெளியே வந்து எங்களுடன் இருப்பவர்களை எண்ணுவாயாக. எண்ணி முடித்த பின்னர் எவரேனும் வரவில்லை என்பதை உணர்ந்தால், நீ மறுபடியும் சென்று உறங்கலாம்.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

