இது குறித்து தகவல் கிடைத்து வந்த புதிய தமிழகம் கட்சியினர் வீட்டின் கிரில் கேட்டிற்கு பூட்டு போட்டுவிட்டு, காரில் பணம் இருப்பதாயும், வீட்டினுள் இருந்து ஏராளமானோருக்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்யப்படுவதாயும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஏராளாமான புதிய தமிழகம் மற்றும் திமுக கட்சியினர் வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் தா.இன்பத்தமிழன் மற்றும் அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனிடையே புதிய தமிழகம் கட்சியினருக்கும், அதிமுகவினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.