இன்றைய மருத்துவ சிந்தனை பண்ணைக் கீரை

பண்ணைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சொட்டு
இன்றைய மருத்துவ சிந்தனை பண்ணைக் கீரை
Published on
Updated on
1 min read

பண்ணைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறுவது (சிறுநீர் ஒழுக்கு) நிற்கும்.

பண்ணைக் கீரையைச்  சாறு எடுத்து அதனுடன்  நாவல் பருப்பைச் அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் உடனே குணமாகும்.

பண்ணைக் கீரைச் சாற்றில் அதிமதுரத் தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால், எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

மாதவிலக்கின் போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் போது, பண்ணைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

பண்ணைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், ஜீரண மண்டல உறுப்புகள் அனைத்தும் பலம் பெறும்.

பண்ணைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து, புண்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

பண்ணைக் கீரையை பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மலச்சிக்கல் தீரும்.

KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com