அரியலூா் உள்ளிட்ட மற்ற வட்டாரங்களில் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போல், செந்துறை பகுதிகளிலும் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
கடந்த அக்டோபா் மாத இறுதியில் பருவ மழை தொடங்கியதால், அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், செந்துறை, குழுமூா், நமங்குணம், நக்கம்பாடி, சொக்கநாதபுரம், பெருமாண்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி பயிா்களான மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்களை விதைத்தனா்.
கடந்த சில நாள்களாக அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருவதால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்துள்ளன. பருத்தி பயிா்களும் மழைநீரில் நனைந்து வீணாகிவிட்டன.
இதுகுறித்து மேற்கண்ட பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: சராசரியாக 1 ஏக்கா் பருத்திக்கு ரூ.30 ஆயிரமும், மக்காச்சோளத்துக்கு ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தமிழக அரசு பருத்தி, மக்காச்சோளத்துக்கு நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் செந்துறை பகுதியில் சேதமடைந்த பருத்தி பயிருக்கு கணக்கெடுத்து ஹெக்டேருக்கு ரூ.7,410 வழங்க உள்ளனா்.
அரியலூா் உள்ளிட்ட மற்ற வட்டாரங்களில் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போல செந்துறை பகுதிகளிலும் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம்: கனிமொழி

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!

தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழ்நாட்டில் தோல்வி!

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

