நான் போட்டித்தேர்வுகளை (தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் மற்றும் ரயில்வே) எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த வேலை எப்பொழுது கிடைக்கும்? எந்த காலகட்டத்தில் திருமணம் கைகூடும்? எதிர்காலம் சரியாக அமைய என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும்? - வாசகர், திருச்சுழி
By DIN | Published On : 26th April 2019 02:35 PM | Last Updated : 26th April 2019 02:35 PM | அ+அ அ- |

உங்களுக்கு மிதுன லக்னம், மகர ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சூரிய, கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய அயன ஸ்தனாதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானத்தில் திக் பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடக்கிறது. அரசு கிரகங்கள் வலுவாக இருப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் கிடைக்கும். 2022 - ஆம் ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.