நான் ஒரு தனியார் கல்லூரி அலுவலகத்தில் வேலை பார்த்தேன். சிலர் சூழ்ச்சி செய்து எனது வேலையை பறித்து விட்டனர். மீண்டும் அந்த வேலையை பெற போராடிக் கொண்டிருக்கிறேன். வேலை மீண்டும் எப்போது கிடைக்கும்? எனக்கு தற்போது என்ன தசை நடக்கிறது? குரு நல்ல நிலையில் உள்ளதா? மறுமலர்ச்சி எப்போது உண்டாகும்? - வாசகர், கோயம்புத்தூர்
By DIN | Published On : 09th June 2019 11:07 AM | Last Updated : 09th June 2019 11:07 AM | அ+அ அ- |

உங்களுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. லக்னம் மற்றும் சுகாதிபதி குருபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான சூரியபகவான் குருபகவானின் பார்வையை பெற்று அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மறுபடியும் வேலை கிடைத்து விடும். திருமணமும் நடந்தேறும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.