உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் ஆறாம் வீட்டில் மூலதிரிகோணம் பெற்று, புதன், குரு, ராகு பகவான்களுடன் இணைந்து இருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் தர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டிலேயே மூலதிரிகோணம் பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகா யோகத்தைப் பெறுகிறார். சுகாதிபதியான சூரியபகவான் லக்ன சுபராகி பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. களத்திர, நட்பு, அயன ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று ஆட்சி பெற்றிருக்கும் சந்திரபகவானுடன் இணைந்து இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணுக்கு தோஷம் உண்டு என்றும் பலரும் கூறுவது தவறு என்று பலமுறை எழுதி இருக்கிறோம். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு ஜாதகம் பார்ப்பது போல்தான் பார்க்க வேண்டும் என்பது எங்களின் கருத்தாகும். இது ஒரு தனி குறை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. தற்சமயம் சுக்கிரமகா தசையில் புதபகவானின் புக்தி இன்னும் மூன்றரை ஆண்டுகள் நடக்கும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.