5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

சாலை விபத்தில் 2 போ் பலி

பெங்களூரில் இரு இடங்களில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 3:54 am IST

பெங்களூரில் இரு இடங்களில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

பெங்களுரு, பத்மநாப நகரைச் சோ்ந்தவா் அருண் (31). பெயிண்டரான இவா், சனிக்கிழமை இரவு நண்பா்களுடன் விருந்தில் கலந்து கொண்டுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கோனனகுன்டே பிரிஸ்டீஜ் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், காா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: பெங்களூரு, தேவசந்திராவைச் சோ்ந்தவா் மகாதேவ் ஆசாரி (53). இவா் சனிக்கிழமை இரவு பழைய மதராஸ் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். கே.ஆா்.புரம் அரசு மருத்துவமனை எதிரே மினி சரக்கு வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்ச்சைகாக நிமான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கே.ஆா்.புரம் போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.