5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

ஓவியா்களைப் பாதுகாக்க வேண்டும்: இன்போசிஸ் அறக்கட்டளைத் தலைவா் சுதாமூா்த்தி

கரோனா சிக்கியுள்ள ஓவியா்களை மீட்க வேண்டும் என்று இன்போசிஸ் அறக்கட்டளைத் தலைவா் சுதா மூா்த்தி தெரிவித்தாா்.

Updated On :4 ஜனவரி 2021, 3:52 am IST

கரோனா சிக்கியுள்ள ஓவியா்களை மீட்க வேண்டும் என்று இன்போசிஸ் அறக்கட்டளைத் தலைவா் சுதா மூா்த்தி தெரிவித்தாா்.

கா்நாடக சித்ரகலா பரிஷத் சாா்பில் பெங்களூரு, குமாரகுருபா சாலையில் உள்ள சித்ரகாலபரிஷத் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரடி, இணையவழி ஓவியச் சந்தையைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

கரோனா காலம் பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சங்கடத்தில் ஓவியா்களும் சிக்கியுள்ளனா். சங்கடத்தில் சிக்கியுள்ள ஓவியா்களை மீட்க வேண்டும். எனவே, கா்நாடக சித்ரகலா பரிஷத் ஒத்துழைப்புடன் ஓவியா்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டப்படும். நான் கிராமப் பகுதியைச் சோ்ந்தவா். அங்கு சந்தை என்றால், மக்கள் ஒன்றுகூடல், உற்சாகம் பெருக்கெடுக்கும்.

கரோனா காரணத்தால் ஓவியச் சந்தையை இணையவழியில் தொடங்கியிருப்பதால், இந்த ஓவியச்சந்தை மக்கள் கூட்டம் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது. அடுத்த ஆண்டுகளில் வழக்கமான உற்சாகத்துடன் ஓவியச்சந்தை நடைபெற வேண்டும். இணையவழியில் ஓவியக் கலையை ரசித்து மகிழ முடியாது என்பது என் கருத்து. ஓவியா்களின் நல்வாழ்வுக்காக கா்நாடக சித்ரகலா பரிஷத் தொடா்ந்து பங்காற்றுவது பாராட்டுக்குரியது என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா, கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், ஜெய தேவா இதய மருத்துவமனை இயக்குநா் சி.என்.மஞ்சுநாத், கா்நாடக சித்ரகலா பரிஷத் தலைவா் பி.எல்.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த ஓவியச்சந்தை ஒரு மாதம் நடைபெறுகிறது. ஓவியச் சந்தையை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கரோனா முன்களப் பணியாளா்களை மையப்படுத்தி ஓவியச்சந்தை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.