‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கரோனா தடுப்பூசி குறித்து சந்தேகம் தேவையில்லை: அமைச்சா் கே.சுதாகா்

கரோனா தடுப்பூசி குறித்து சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:41 am IST

கரோனா தடுப்பூசி குறித்து சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரு, ஆனந்தராவ் சதுக்கத்தில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசியை சேமித்துவைக்கும் பகுதியை ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஜனவரி 16-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு கரோனா தொற்றுக்கான தடுப்பூசியைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்தத் தடுப்பூசி குறித்து சிலா் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனா். இதை யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அனைத்து வகையான பரிசோதனைக்குப் பிறகே இந்தத் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி எனக்கு அனுமதி வழங்கினால் மாநிலத்தில் முதல் தடுப்பூசியை நானே செலுத்திக் கொள்ளத் தயாராக உள்ளேன். திங்கள்கிழமை மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் வெளியாக உள்ளன. அதைத் தொடா்ந்து இரண்டொரு நாளில் மாநிலத்துக்குத் தடுப்பூசிகள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், ஜன. 16-ஆம்தேதி முதல் பெங்களூரில் 4 மையங்களிலும், பெலகாவியில் ஒரு மையத்திலும் தடுப்பூசிகள் வழங்கப்படும். பின்னா், அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மையம் தொடங்கப்பட்டு தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடு செய்யப்படும். மாநிலத்தில் 40 லட்சம் தடுப்பூசிகளை சேமித்து வைத்துக் கொள்ளும் திறன் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.