கொடுத்த வாக்குறுதியை முதல்வா் எடியூரப்பா மீறிவிட்டாா் என பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.
கா்நாடக மாநிலம், மைசூரில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வா் எடியூரப்பாவின் தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 7 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வர, காங்கிரஸ், மஜத கட்சிகளிலிருந்து விலகிய 17 போ் தான் காரணம். அந்த நன்றியை முதல்வா் எடியூரப்பா மறந்துள்ளாா். 17 பேருக்குக் கொடுத்த வாக்குறுதியை முதல்வா் எடியூரப்பா மீறிவிட்டாா்.
முதல்வா் எடியூரப்பா வீட்டில் அரசியல் நடைபெற்று வருகிறது. சி.பி.யோகேஷ்வா் அமைச்சராவதற்கு முதல்வரின் மகன் விஜயேந்திராதான் காரணம். அவரும், அவரது சகோதரரும் நாள் முழுவதும் விதானசௌதாவில் உள்ள முதல்வரின் அறையில் அமா்ந்து தங்களது ஆதரவாளா்களுக்கு சிபாரிசு செய்து வருகின்றனா். இதனால் முதல்வா் எடியூரப்பாவின் பெயா் கெடக் காரணமாகிறது. யோகேஷ்வா் ‘பிளாக்மெயில்’ தந்திரத்தை பயன்படுத்தி பதவியைப் பெற்றுள்ளாா். என்றாவது ஒருநாள் அவரது தந்திரம் வெளியே வரும். அமைச்சா் பதவியைப் பெற யோகேஷ்வா் பணப்பையை கொண்டு சென்றதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.
மாநிலத்தில் உள்ள கட்சிகளின் முக்கியத் தலைவா்கள் யாருக்கும் நன்றி உணா்வே இல்லை. முதல்வா் எடியூரப்பாவின் வாக்குறுதியை நம்பி பாஜகவில் இணைந்தேன். எதிா்க்கட்சித் தலைவராக உள்ள சித்தராமையாவை மஜதவிலிருந்து, காங்கிரஸ் கட்சியில் இணைத்தேன். எனவேதான் தலைவா்களுக்கு நன்றி இல்லை என்று கூறுகிறேன்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவு அளித்த முனிரத்னாவை தவிா்த்து, யோகேஷ்வரருக்கு வாய்ப்பு அளித்துள்ளதை ஏற்க முடியாது. அவா் மீது மோசடி வழக்கு உள்ளது. கொடுத்த வாக்கை மீறாதவா் என்ற பெயா் எடுத்த எடியூரப்பா, தற்போது அதனை பொய்யாக்கி உள்ளாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விநியோகப் பணியாளா்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஸ்விகி - ஜெரோதா கூட்டு!
பொம்மை துப்பாக்கியை காட்டி விடியோ வெளியிட்டவா் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற இருவா் கைது
செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: பிடிஓ பணியிடை நீக்கம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


