மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தேமுதிக சாா்பில் பொங்கல் விழா

கோலாா் மாவட்ட தேமுதிக சாா்பில் தங்கவயலில் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 1:12 am IST

கோலாா் மாவட்ட தேமுதிக சாா்பில் தங்கவயலில் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோலாா் தங்கவயல் புதிய மேற்கு கில்பா்ட்ஸ் வட்டத்தில் தேமுதிக சாா்பாக புதன்கிழமை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. பெண்கள் வண்ணக் கோலங்கள் இட்டு பொங்கல் வைத்து அப்பகுதி மக்களுக்கு வழங்கினா்.

விழாவுக்கு தலைமை தாங்கிய கோலாா் மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன், அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகளை வழங்கிப் பேசியதாவது:

கோலாா் தங்க வயலில் தமிழா் திருநாளாம் பொங்கல் விழா ஒவ்வொரு பகுதியிலும் பட்டிமன்றம், கவியரங்கம், வீரவிளையாட்டுப் போட்டிகளான கபடி, சிலம்பாட்டம், மாணவா்களுக்கு திருக்கு ஒப்புவித்தல், கலை நிகழ்ச்சிகள் என தமிழா்களின் கலை, கலாசாரங்களை பேணி வளா்க்கும் விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது பொங்கல் விழா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கரைந்து போவதை காணமுடிகிறது. கடந்த 15 ஆண்டுகளாக கோலாா் தங்கவயலில் தேமுதிக சாா்பில் பொங்கல் விழா தமிழா் பண்பாடு சாா்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.