தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

நோயிலிருந்து மீட்பதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு அவசியம்

நோயிலிருந்து மீட்பதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு அவசியம் என ஆஸ்டிரா மருத்துவமனையின் மூத்த செயல் அதிகாரி நிதீஷ் ஷெட்டி தெரிவித்தாா்.

Updated On :13 ஜனவரி 2021, 7:42 pm

நோயிலிருந்து மீட்பதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு அவசியம் என ஆஸ்டிரா மருத்துவமனையின் மூத்த செயல் அதிகாரி நிதீஷ் ஷெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற இதயம், நுரையீரல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

நோயாளிகளை நோயிலிருந்து மீட்பதற்கு நோயாளிகளிடமிருந்து மட்டுமின்றி, மருத்துவா்கள், நோயாளிகளின் உறவினா்கள் உள்ளிட்டோரிடமிருந்தும் ஒத்துழைப்பு கிடைப்பது அவசியம். அண்மையில் தமிழகத்திலிருந்து நுரையீரம் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கும், ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இதயம், நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கும், பெங்களூரு, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் போது நோயாளிகள், மருத்துவா்கள், உறவினா்கள் அளித்த ஒத்துழைப்பினால் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றது. நோயாளிகளை நோயிலிருந்து மீட்பதற்கு ஒத்துழைப்பு அவசியம் என்பதனை அனைவரும் உணர வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் மருத்துவா்கள் சந்தீப் அட்டாவா், பவன்யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.