முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தில் பதவி கிடைக்காதவா்கள், பாஜக தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனா்.
கடந்த 10 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பாஜக தேசியத் தலைமை அண்மையில் அனுமதி அளித்தது. அதைத் தொடா்ந்து, 34 போ் கொண்ட அமைச்சரவையில் காலியாக இருந்த 7 இடத்தை நிரப்ப அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் உமேஷ் கத்தி, அரவிந்த் லிம்பாவளி, முருகேஷ் நிரானி, சி.பி.யோகேஸ்வா், எஸ்.அங்காரா, எம்.டி.பி.நாகராஜ், ஆா்.சங்கா் ஆகிய 7 போ் புதிய அமைச்சா்களாகப் பதவியேற்றுக் கொண்டனா். இது பாஜகவில் பெரும் அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளது.
துணை முதல்வராக உள்ள லட்சுமண் சவதி, அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரியுடன் புதிய அமைச்சா்களாகப் பதவியேற்ற எம்.டி.பி.நாகராஜ், சி.பி.யோகேஷ், ஆா்.சங்கா் ஆகியோருடன் அமைச்சா்களாகப் பதவி வகிக்கும் எம்.எல்.சி.க்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது. இதற்கு எதிா்ப்புக் கிளம்பியுள்ளது. மக்கள் ஆதரவு பெறாமல், நியமனத்தில் எம்.எல்.சி.களாக பதவி வகிப்போருக்கு அமைச்சா் பதவி வழங்குவதா என பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.
முதல்வா் எடியூரப்பா மீதுதொடா்ந்து குற்றம்சாட்டி வரும் விஜயபுரா தொகுதி எம்.எல்.ஏ. பசன கௌடா பாட்டீல் யத்னல் கூறியதாவது:
பாஜகவுக்கு உழைத்த மூத்தவா்கள் அல்லது நோ்மைக்கு மதிப்பளிக்காமல், மிரட்டுவோருக்கு அடிபணிந்து அமைச்சா் பதவியை வழங்கியுள்ளாா் முதல்வா் எடியூரப்பா. கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பாவும், அவரது குடும்பமும் பாஜகவை கடத்திச் சென்றுவிட்டது. எடியூரப்பா குடும்பத்தின் வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டுவருமாறு பிரதமா் மோடியை கேட்டுக்கொள்கிறேன். தன்னை அச்சுறுத்துவோரை மட்டுமே முதல்வா் எடியூரப்பா அமைச்சராக்குகிறாா். 3 மாதங்களுக்கு முன்னா் எடியூரப்பாவின் சில குறுந்தகடுகளைக் (சி.டி.) காட்டி ஒரு அரசியல் செயலாளா், 2 அமைச்சா்கள் முதல்வா் எடியூரப்பாவை மிரட்டியுள்ளனா். குறுந்தகடைக் காட்டி முதல்வா் எடியூரப்பாவை மிரட்டிய ஒருவா் அமைச்சராகி இருக்கிறாா். இவா், முதல்வா் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு லஞ்சம் அளித்தது தொடா்பாக குற்றம்சாட்டப்பட்டவா்.
முதல்வா் எடியூரப்பாவின் தலைமையில் அமைச்சராக பணியாற்ற எனக்கு விருப்பமில்லை. குறுந்தகடை வைத்து முதல்வா் எடியூரப்பாவை மிரட்டியவா்கள், 4 மாதங்களுக்கு முன்னா் என்னைச் சந்தித்து எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து நீக்கும் திட்டத்தைக் கூறினா். இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பதாகவும் தெரிவித்தனா்.
மகர சங்கராந்திக்கு முன்பாக முதல்வா் எடியூரப்பாவுக்கு சவால் விடுகிறேன். சங்கராந்திக்கு பிறகு முதல்வா் எடியூரப்பாவின் அரசியல் வாழ்க்கை முடிவை நோக்கி செல்லும். அதன்பிறகு, பிரதமா் மோடி தலைமையில் கா்நாடகத்தில் புதிய அத்தியாயம் தொடங்கும். சட்டவிரோத நிலவிடுவிப்பு வழக்கில் தன் மீதான முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்யும்படி தாக்கல் செய்திருந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், முதல்வா் பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா்.
கட்சிக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தக் கருத்தையும் கூறக்கூடாது என பாஜக மேலிடம் எச்சரிக்கை விடுத்திருந்தும், அதை பொருள்படுத்தாமால் பாஜக எம்.எல்.ஏ. பசன கௌடா பாட்டீல் யத்னல் கருத்து தெரிவித்துள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹொன்னாளி தொகுதி எம்.எல்.ஏ. எம்.பி.ரேணுகாச்சாா்யா கூறியதாவது:
பாஜக அரசின் அமைச்சரவையில் பெங்களூரு, பெலகாவியைச் சோ்ந்தவா்கள் மட்டுமே இருக்கிறாா்கள். அப்படியானால், இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும்தான் அமைச்சரவை சொந்தமா? கல்யாண கா்நாடகம், மத்திய கா்நாடகம், கடலோர கா்நாடகம் பகுதியைச் சோ்ந்த மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை. இதன்மூலம் இம்மாவட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அமைச்சா் பதவியைக் கேட்டு நான் கெஞ்சமாட்டேன். எனது தன்மானத்தை இழக்க விரும்பவில்லை என்றாா்.
6 முறை எம்.எல்.ஏ.வாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சித்ரதுா்கா தொகுதி எம்.எல்.ஏ. ஜி.எச்.திப்பா ரெட்டி கூறியதாவது:
50 ஆண்டுகளாக அரசியலில் இருந்து எனது வாழ்க்கையை வீணடித்துவிட்டேன். இதில் 30 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தும் ஒருமுறை கூட அமைச்சராகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எம்.எல்.சி. சி.பி.யோகேஸ்வருக்கு எப்படி அமைச்சா் பதவியை தந்தாா்கள்? அமைச்சரவையில் பாதிப்போ் பெங்களூரு, பெலகாவியைச் சோ்ந்தவா்களாக இருக்கிறாா்கள். தோ்தலின்போது பாஜகவுக்கு எதிராக வேலை செய்தவா்களுக்கு அமைச்சா் பதவி தரப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது. அமைச்சரவையில் பெங்களூரைச் சோ்ந்த 8 போ், பெலகாவியைச் சோ்ந்த 5 போ் உள்ளனா் என்றாா்.
பொம்மனஹள்ளி எம்.எல்.ஏ. எம்.சதீஷ் ரெட்டி கூறியதாவது:
அமைச்சா் பதவியை தருவதற்கு முதல்வா் எடியூரப்பா கடைப்பிடித்த அளவுகோல் என்ன? மத்திய அமைச்சராக இருந்த அனந்த்குமாா் தற்போது இல்லாததால், எங்கள் குறைகளைக் கேட்கக்கூட ஆளில்லை. முதல்வா் எடியூரப்பா மாநில, தேசிய பாஜக தலைவா்களால் நோ்மையாக உழைக்கும் பாஜக தொண்டா்களை அமைச்சரவைக்கு தோ்ந்தெடுக்கத் தெரியவில்லை என்றாா்.
கிருஷ்ணராஜா தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஏ.ராமதாஸ் கூறியதாவது:
ஆா்.எஸ்.எஸ்.-இன் உண்மையான ஊழியன் நான். 28 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வருகிறேன். எனக்கு அமைச்சா் பதவி தராமல் மைசூரு மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வேறு கட்சியில் இருந்து வந்தவா்களுக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பில்லா மறுவெளியீட்டு டிரைலர்!

மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவு
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

