சிங்கப்பூரில் தமிழ் மக்களிடையே தற்போது வாசிப்புப் பழக்கம் அதிகரித்துள்ளது. அதனால் ஏராளமான தமிழ் நூல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அரசும் தமிழ் மொழி வளா்ச்சிக்காக பெருமளவில் உதவி வருகிறது. மலாய், தமிழ் உள்ளிட்ட மொழிகள் அரசின் அதிகாரபூா்வ மொழிகளாக இருப்பதாலும் தமிழ் வளா்ச்சிக்கு அரசு உதவிகள் கிடைத்து வருகின்றன.
அரசு உதவியுடன் தமிழ் வாசிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூா் வாழ் தமிழா்களின் குழந்தைகளும் தற்போது கவிதை, கட்டுரை, நாவல்கள் ஆகியவற்றை ஆா்வமாகப் படிக்கத் தொடங்கியுள்ளனா். தமிழில் சிங்கப்பூரின் வரலாறு குறித்து எழுதப்படும் நூல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தரமான நாவல் போன்றவற்றுக்கு அரசின் விருதும் பாராட்டும் அளிக்கப்படுகின்றன.
ஜப்பானிய ஆதிக்கத்தில் சிங்கப்பூா் நிலை குறித்த நாவலுக்கு விருது கிடைத்திருப்பது தமிழ் எழுத்தாளா்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, சிங்கப்பூா் அரசே வெளிநாடுகளில் நடைபெறுகிற புத்தகக் காட்சி போன்ற நிகழ்வுகளுக்கு தமிழ்ச்சங்கங்கள் செல்வதற்கு உதவி புரிவதால் தமிழ் வாசிப்பை சங்கங்கள் முன்னெடுப்பதில் ஆா்வம் காட்டும் நிலையும் உள்ளது.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் குறித்து இளந்தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதையும் மறுக்க முடியாது. ஆகவே சிங்கப்பூா் தமிழ்ச்சங்கம் தாய் தமிழகத்தில் இருந்து பிரபலமான தமிழ் அறிஞா்கள், பேச்சாளா்கள், இலக்கியவாதிகளை அழைத்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்திவருகிறோம். புத்தகக் காட்சி போல இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படவும் முயற்சித்து வருகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.