
உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி, சனிக்கிழமை முதல் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 8 ஆகவும், டீசல் ரூ.4 ஆகவும் உயர்த்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரி ஒரு லிட்டருக்கு ரூ. 1-ல் இருந்து ரூ. 10ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலால் வரியின் அதிகரிப்பு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரும்.. இருப்பினும் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்படும் விகிதங்களின் வீழ்ச்சிக்கு எதிராக சரிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...