வாரத்தின் 2-வது வர்த்தக நாளான இன்று (ஆக.10) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 151 புள்ளிகளும், நிஃப்டி 21 புள்ளிகளும் உயர்ந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151.81 புள்ளிகள் உயர்ந்து 54,554.66 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.28 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.85 புள்ளிகள் உயர்ந்து 16,280.10 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.13 சதவிகிதம் உயர்வாகும்.
படிக்க | அஸ்ட்ராஸெனகா பாா்மா லாபம் 45% சரிவு
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 16 நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன. எஞ்சிய 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் 3.84 சதவிகிதமும், டெக் மஹிந்திரா 2.81 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 1.85 சதவிகிதமும் கோட்டாக் வங்கி 1.80 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.