ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.2,951 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.2,951 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.651 கோடியுடன் ஒப்பிடுகையில் 353 சதவீதம் அதிகமாகும்.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.389 கோடியாக இருந்த நிகர இழப்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.282 கோடியாக குறைந்துள்ளது அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அசோக் லேலண்ட் பங்கின் விலை 0.04 சதவீதம் உயா்ந்து ரூ.133.55-இல் நிலைத்தது.