ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

'ஃபோல்டபிள்' ஸ்மார்ட்போன்களின் விலையை வெளியிட்ட சாம்சங் நிறுவனம்

சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம்  தன்னுடைய புதிய வரவான மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட கேலக்சி இசட் போல்ட் 3 5-ஜி மற்றும் கேலக்ஸி இசட் பிலிப் 3 5-ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடுகிறார்கள் 

News image

'ஃபோல்டபிள்' ஸ்மார்ட்போன்களின் விலையை வெளியிட்ட சாம்சங் நிறுவனம்

Updated On :16 ஆகஸ்ட் 2021, 4:14 pm IST

சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம்  தன்னுடைய புதிய வரவான மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட கேலக்சி இசட் போல்ட் 3 5-ஜி மற்றும் கேலக்ஸி இசட் பிலிப் 3 5-ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடுகிறார்கள் . 

கடந்த வாரம் இந்திய பொருளாதார நிலைக்கு தகுந்தது போல சரியான விலையை பின்னர் அறிவிப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்திருந்தனர். தற்போது மடிக்கும் வகை ஸ்மார்ட்போன்களின் விலையை அறிவித்திருக்கிறார்கள்.

கேலக்ஸி இசட் போல்ட் 3 , 5-ஜி   -  7.6 இன்ச் அளவுள்ள இன்பினிட்டி தொடுதிரை உடன் 12 ஜிபி உள்ளக நினைவகமும் , 512 ஜிபி கூடுதல் சேமிப்புத் திறனுடனும்  12 எம்பி, 10 எம்பி மற்றும் 4 எம்பி கொண்ட மூன்று கேமரா அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது . பாட்டரி சேமிப்பின் அளவு 4400ஆம்ப் கொண்ட இந்த சாதனத்தின் முன்பதிவு விலை ரூ.1,42,999  . சந்தைக்கு வந்த பின் 12+256 ஜிபி கொண்ட சாதனம் 1,49,999  என்றும்  12+512 ஜிபி திறன் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை  ரூ.1,57,999 எனவும்  நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

கேலக்ஸி இசட் பிலிப் 3 5-ஜி - இரண்டு விதமாக வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றில்  8 ஜிபி உள்ளக நினைவகமும் 256 ஜிபி கூடுதல் சேமிப்புத் திறனுடனும் மற்றொன்றில் 8 ஜிபி உள்ளக நினைவகமும் 128 ஜிபி கூடுதல் சேமிப்பு வசதியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10 எம்பி பின் பக்கமாகவும் 4 எம்பி முன் பக்கமாகவும் இரண்டு கேமராக்களை  பொருத்தியிருக்கிறார்கள். பாட்டரி சேமிப்பின் அளவு 3,300 ஆம்ப் கொண்ட இந்த சாதனத்தின் முன்பதிவு  விலை ரூ.77,999 . இதிலும் 12+128 ஜிபி ரூ.84,999 ஆகவும்  12+256 ஜிபி திறன் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 89,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் எச்டிஎப்ஸ் வங்கிக்கணக்கின் மூலம் வாங்கினால் 7,000 வரை தள்ளுபடி செய்வதாகவும் மேலும் 7000 செலுத்தினால்  ஓராண்டிற்கு ஸ்மார்போன்களுக்கு காப்பீடு திட்டமும் செய்து தரப்படும் என தெரிவித்திருக்கிறார்கள்..

ஆகஸ்ட் 24 ஆம் தேதிவரை முன்பதிவு விலையே தொடரும் என்றும் அதற்கு பின்  வருகிற செப்டம்பர் மாதம் சந்தைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நிர்ணையித்த விலையே தொடரும் என சாம்சங் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.