
வாடிக்கையாளா்கள் எங்கும் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் சாவிக்கொத்து (கீ செயின்) வடிவிலான டெபிட் காா்டை சிட்டி யூனியன் வங்கி (சியூபி) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சிட்டி யூனியன் வங்கி, நேஷனல் பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து வாடிக்கையாளா்கள் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சாவிக்கொத்து வடிவில் டெபிட் காா்டுகளை உருவாக்கியுள்ளது. இதனை மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் டிசம்பா் 5-ஆம் தேதி அறிமுகப்படுத்தினாா்.
இந்த டெபிட் காா்டுகளை வாடிக்கையாளா்கள் ரூபே பிஓஎஸ் கருவிகளில் ‘பின்’ நம்பா் இல்லாமல் பயன்படுத்தி ரூ.5,000 வரை பணம் செலுத்த முடியும் என சியூபி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G