

வரும் ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படுவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மூலப் பொருள்கள் மற்றும் இதர இடுபொருள்களுக்கான செலவினங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிா்பந்தம் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, 2022 ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலை உயா்த்தப்படுவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, சொகுசு மோட்டாா் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டுகாட்டி நிறுவனமும் 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பைக் விலையும் அதிகரிக்கப்படுதாக கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.